பசு பற்றி 50 தகவல்கள்
1. இந்தியாவில் குஜராத்
மாநிலத்தில்தான் பசுவதைத்
தடை சட்டம் மிகத் தீவிரமாக
அமல்படுத்தப்பட்டுள்ளது.
2. நேபாளம் நாட்டில்
பசுவை கவுரவிக்கும் வகையில்
அதை அந்த நாட்டின் தேசிய
விலங்காக அறிவித்துள்ளனர்.
3. பகவான் கண்ணபிரானுக்கு மிக,
மிக பிடித்தது பசுதான்.
எனவேதான் அவர்
தன்னை கோபாலகிருஷ்ணன்
என்று அழைக்கும்படி கூறினார்.
4. கோபூஜை நடத்தும்
போது கண்டிப்பாக பசுவுடன் அதன்
கன்றும் இருக்க வேண்டும்.
5. பசுவின் வாயில்
கலிதேவதை இருப்பதால்தான்
பசு முன் பகுதியில்
பூஜை செய்யப்படுவது இல்லை.
6. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம்
போன்ற நாட்களில் பசு தானம்
செய்தால் கூடுதல் புண்ணியம்
கிடைக்கும்.
7. ஒரு பசு முதல்
கன்று பிரசவித்ததும்,
அதை தேனு என்பார்கள்.
இரண்டாவது கன்று பிரசவித்ததும்
அதற்கு ``கோ'' என்றழைப்பார்கள்.
எனவே இரண்டாவது கன்று பிரசவித்த
பசுவைத்தான்
கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.
8. காமதேனு பசு மூவுலகிற்கும்
தாயாக கருதப்படுகிறது.
9. பசுவின் கால் தூசி நம்
மீது படுவது கங்கையில் புனித
நீராடலுக்கு சமம்
என்று புராணங்களில்
கூறப்பட்டுள்ளது.
10. பசுவுக்கு தினமும்
பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.
11. பசுவின் உடலில்
முப்பத்து முக்கோடி தேவர்களும்,
நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,
அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும்
ஆட்சி செய்கின்றனர்.
12. கோபூஜை செய்வதால்
கிடைக்கும் உடனடி நன்மை என்ன
தெரியுமா? பணக் கஷ்டம் நீங்கும்.
13. பசுவை 108
போற்றி சொல்லி வழிபட்டால் பல
புராதனக்
கோவில்களுக்கு சென்று வந்த பலன்
கிடைக்கும்.
14. வீட்டில் பசு வளர்ப்பது செல்வ
செழிப்பை உண்டாக்கும்.
15.
பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்க
இயலாவிட்டால் வாழைப்பழம்
வாங்கிக் கொடுக்கலாம்.
16. பசுக்கள் தங்களுக்கு என்ன
வேண்டும் என்பதை கேட்க
முடியாது.
எனவே குறிப்பறிந்து பசுக்களுக்கு உதவ
வேண்டும்.
17. பசுக்களை அடிக்கடி நீர்
நிலைகளில் நீந்தி குளிக்க
வைப்பது நல்லது.
18. அதிகப்பால் கறப்பதற்காக
பசுக்களுக்கு அதிகப
19. உங்களால் வீட்டில் உள்ள
பசுவை பராமரிக்க இயலாவிட்டால்,
அதை அடி மாடாக விற்காமல்,
ஏதாவது ஒரு கோ சாலையில்
சேர்த்து விடுவது நல்லது.
20. பசுக்கள் இறந்தால்,
அவற்றுக்கு உரிய முறையில்
இறுதிச் சடங்குகள் செய்யப்பட
வேண்டும்.
21. பசுவையும் கன்றையும்
பிரிக்கும் பாவத்தை ஒரு போதும்
செய்யக் கூடாது.
22. பசுவானது பால் கறக்கும்
நிலையில் இருக்கும் போது தானம்
செய்வதுதான் மிக சிறந்த
தானமாகும். பால் கறக்கும்
பாத்திரமும் கொடுப்பது இன்னும்
சிறப்பானது.
23. சிலர் பசுவுடன் காளையையும்
சேர்த்து தானம் அளிப்பார்கள். இந்த
தானம் கூடுதல் பலன் தருவதாகும்.
24. ஒரு காரியம் வெற்றி அடைய
வேண்டும்
என்று விரும்புகிறீர்களாப
அதற்காக கோ தானம்
செய்து பாருங்கள். நிச்சயம்
வெற்றி உண்டாகும்.
25. பசு தானம் வாங்குபவர்கள் லட்சம்
தடவை காயத்ரி மந்திரம் சொன்னால்
சுமை குறையும்.
26. ஏதாவது மங்கல
நிகழ்ச்சி நடக்கும்போது பசுதானம்
செய்தால், அதற்குரிய
நன்மை கிடைக்கும்.
27. பசு தானம் கொடுக்கும்
போது ஜெர்சி இன
பசுக்களை தானம் வழங்கக் கூடாது.
நாட்டு பசுவையே தானமாக
கொடுக்க வேண்டும்.
28.
சனீஸ்வரனுக்கு காராம்பசு தானம்
கொடுப்பது நல்லது.
29. சூரிய பலம் பெற
விரும்புபவர்கள் சிவப்பு நிற
பசுவை தானமாக கொடுக்க
வேண்டும்.
30.
பசுவை மாடு என்று அழைக்காமல்
பசுத்தாய்,
கோமாதா என்று அழைத்தால்
சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.
31. நன்றாக பால் கறக்கும்
பசுக்களை காசியில் தானம்
செய்தால், அவர்களது 7
தலைமுறை பலன் அடையும்.
32. ராமேசுவரத்தில் காராம்
பசு தானம் செய்தால் ஆண்
வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.
33.
ஒரு பசுவை ஒருவருக்கு மட்டுமே தானமாக
கொடுக்க வேண்டும்.
34. மரணப்படுக்கையில் இருக்கும்
ஒருவர், அவரது பாவங்கள்
நீங்கி நற்கதி அடைய பசு தானம்
செய்வதை நம் முன்னோர்கள்
வழக்கமாக வைத்திருந்தனர்.
35. பித்ருபூஜை செய்யும்
போது பசு தானம்
கொடுப்பது மிகுந்த நன்மை தரும்.
36. ஒரு பெண் ருதுவானதும்
தோஷங்கள் நீங்க பசுக்களை தானம்
செய்யலாம்.
37. கோவில்களில் விளக்கேற்ற
பசுக்களை குறிப்பிட்ட
எண்ணிக்கையில் தானம்
செய்வதை ஆதி தமிழர் கள்
வழக்கத்தில் வைத்திருந்த னர்.
38. பசு தானம்
அடிக்கடி செய்வது வம்ச
விருத்தியை உறுதி செய்யும்
என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
39. பசுவையும் கன்றையும் யார்
ஒருவர்
நன்கு பராமரிப்பு செய்கிறாரோ,
அவரது இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி உண்டாகும்.
40. கடுமையான நோயால்
பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற
பசுவை தானம் செய்தால் பரிகாரம்
உண்டாகும்.
41. திருவண்ணாமலை கிரிவல
பாதையில் நிறைய பேர்
பசுவுக்கு அகத்திகீரை வாங்கிக்
கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள்.
பசுவுக்கு ஒரு தடவை அகத்தி கீரை கொடுத்தாலே,
பிறவி பாவம் விலகும்
என்பது ஐதீகம்.
42. நம் வீட்டில் பசு வளர்க்க
வாய்ப்பு இல்லை யெனில்
பசு வைத்திருப்
பவர்களுக்கு நாமாக உதவ வேண்
டும்.
43. வீட்டில் பசு இல்லாதவர்கள்
அன்றாடம்
ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒருபிடி அறுகம்
புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக்
கீரையோ, பிறதீவனமோ கொடுக்க
வேண்டும்.
44. வெளிப்புறம் மேயும்
பசுக்களுக்கு நம் வீட்டின்
அல்லது தோட்டத்தின் வெளிப்புறம்
தண்ணீர் தொட்டி அமைக்கலாம்.
45. பசுக்கள் தொழுவத்தில் கட்டிப்
போடப்பட்டிருக்கும்
வரை சாணத்தையும்,
கோசலத்தையும்
அவ்வப்போது அப்புறப்படுத்தி தொழுவத்தைக்
கழுவிவிட வேண் டும்.
46. விளை நிலங்களில்
சிறு பகுதியையாவது வருடந்தோறும்
மாறி மாறித் தரிசாக
விடுவது நிலங்களுக்கு நல்லது.
மாடுகளுக்கும் புல் மேய்விடம்
கிடைக்கும்.
47. வசதியுள்ளவர்கள்
வழிப்போக்கு மாடுகளுக்காக
சிறிதளவு வைக்ககோல்
போட்டு வைக்க வேண்டும்.
48. பசுங்கன்று பால் மணம் மாறும்
முன்பே சினைப்படுத்தி,
கன்று ஈனச் செய்து பால்
கறப்பது முறையல்ல.
49. நமக்கு வருவாய் அளிக்க இயலாத
நலிந்த பசு மாடுகளை,
பசுக்களை பராமரிக்கும்
பசு மடங்களிலும்
தொழுவங்களிலும் சேர்ப்பிக்க
வேண்டும்.
50. பசுக்களை அவற்றின்
இயற்கையான அந்திமக் காலம்
வரை பராமரித்துக் காக்க
வேண்டும்.
No comments:
Post a Comment