Tuesday, March 31, 2015

இனி திருந்துமா இந்தியா?

இனி திருந்துமா இந்தியா?

ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். பெங்களூர் தான் அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அங்கு 'பென்ஸ்' தொழிற்சாலையில் பொருத்துனர் (fitter)ஆக வேலை செய்கிறார்.அரைகுறை தமிழில் பேசுவார்.
பிட்டராக இருந்தாலும் விவரமானவர்; பல துறைகளில் ஞானம் உள்ளவர் அவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் 
பல அரிய தகவல்கள் கிடைத்தன.

அவர் கூறியது;
சார்.... இப்போது இந்தியாவிலே 'பென்ஸ்' கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது....
அஹா.... ஜெர்மன் நாட்டு கார் ன்னு பணக்காரர்களும், பெரிய தொழிலதிபர் களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்குறாங்க.இந்த கார்ல இருக்கற பல முக்கியமான பாகங்கள், கியர்பாக்ஸ் உள்பட, இந்தியாவில், இருக்கும்' டாடா'(TATA) கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது.... நாங்க அதை அங்கே பொருத்தி,பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்! 
இதுக்கு காரணம் என்ன தெரியுமா? ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு கூட ஆகாது நம் நாட்டில்..நாங்கள், எங்களுக்கு தேவையான டிசைன் மற்றும் மூல பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்....
இங்கே இந்தியாவில் லேபர், ரொம்ப "சீப்!' அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, "அட்வான்டேஜ்' ஆகிவிடுகிறது.
இந்தியாவில் லேபர் எவ்வளவு, "சீப்' எனபதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்குங்க சார்....' என்றவர், தன் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்து படித்து காட்டினார். அப்படியே ஒரு கனம் அதிர்ந்து போனேன்! 

ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமேரிக்க தொழிலாளியை வேலைக்கு அமரத்தலாம்.
இல்லையென்றால், தைவான் நாட்டு தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்....
ஆனால், இந்தியத் தொழிலாளியின் நிலையோ பரிதாபம் ?
..ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் "128" இந்திய தொழிலாளர்களை(வெட்ககேடு) வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றால் பாருங்கள்.

இந்திய தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 25 ரூபாய் என்றால் ,ஜெர்மன் தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்!
அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள் , புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்ட தயங்கப் போறாங்க!

கடந்த 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்... ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்க்கும் (கேன்ஸர்,ஆஸ்துமா போன்று)கேடு விளைவிக்க கூடிய பாதுகாப்பு அம்சம் குறைந்த, ஜெர்மனி நாட்டு சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இந்தியாவிற்கு வந்து உள்ளன; என்றார் அந்த நண்பர்.

புதிய பொருளாதார கொள்கை என்கிற பேரில் வெளிநாட்டு குப்பைகளை கொட்ட இந்தியா என்ன குப்பை தொட்டியா? நம் நாடு அந்நிய நாட்டின் குப்பைக்கொட்டும் கிடங்கு ஆகாமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொறு இந்தியனின் கடமை அல்லவா. ...நண்பர்களுக்கும் பகிருங்கள்

விவசாயத்தை நேசிப்போம், வீரியமாய் வாழ்வோம்



ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி, மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.
அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார்.

அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும்.

இப்பசுக்களை அழித்துவிட்டால் விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங்கிலேயர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.

நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் காலம்காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது. பசுக்கள் அழிந்தால் இந்தியர்கள், உரத்துக்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரைச் சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.

நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 குவிண்டால் அளவுக்குச் சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760-இல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்லப் பசுவதைக் கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். நாளொன்றுக்கு 30 ஆயிரம் பசுக்கள் வீதம் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பசுக்களைக் கொன்றார்.

அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன் இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டன. அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள்தொகையைவிட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இதன் மூலம் உணவுதானிய உற்பத்தி தடையின்றி நடந்தது. 1910-ஆம் ஆண்டு நம் நாட்டில் 350 பசுவதைக்கூடங்கள் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததும் நாம் ரசாயன உரத்துக்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.

நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெருமளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினோம். அதன் பக்கவிளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.

ஒருமுறை நிருபர் ஒருவர் இந்த பசுவதைக் கூடங்கள் பற்றி மகாத்மா காந்திஜியிடம் கேட்டபோது, “இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்’ என்றார்.

1929-ஆம் ஆண்டு நேரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “நான் இந்தியாவின் பிரதமரானால் இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்’ என்றார்.

இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் 1947-க்கு பின் 350 பசுவதைக்கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக்கூடங்கள் என்ற நிலைக்கு இப்போது முன்னேறிவிட்டோம்.

இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக்கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சாப்பாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றன. தில்லியில் மட்டும் 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்குகின்றன, இங்கு மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.

நமது நாட்டுப் பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள் நல்ல உடல் சக்தியுடன் நோய் எதிர்ப்புத் திறன், வெயிலைத் தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக்கணக்கான பசுக்களைச் சந்தைகளில் வாங்கி, வதைக்கூடங்களுக்கு அனுப்பி வருகிறது.

இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடமிருந்து பறித்துச் செல்லப்படுகின்றன.

விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தகக் கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன.
கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்துகொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தில் இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.

விளைநிலம் குறைந்தால் என்ன? குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலார்கள் உள்ளனர். உணவுப்பொருள்களை விளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது வருங்கால சந்ததிகள்தான். அறிவியலார்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின் புள்ளிவிவரப்படி நம் நாட்டில் உள்ள 72 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவுக்கு உடல் உழைப்பை நமக்குக் கொடையாக அளிக்கின்றன.

இந்த உழைப்பின் மூலம், அதே அளவு சக்தியை உற்பத்தி செய்ய நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருள்களைச் சேமிக்கின்றன.

இக்கால்நடைகளால் ஓராண்டுக்கு 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்குக் கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய்.

இச்சாணம் கிடைப்பதால் 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால் மரங்கள் அதிக அளவுக்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால் நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.

அவற்றை இயக்குவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும்.

இயற்கை நமக்குத் தந்த செல்வங்களான, கால்நடைகளைக் கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று ரசாயன உர இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம். அது மட்டுமன்றி பால் மற்றும் பசு சார்ந்த பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம்.

ஒரு நவீன மாடு வதைக் கூடத்திற்கு அதைச் சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் தண்ணீர் தட்டுப்பாடும் எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம் நாட்டில் இயற்கை யின் கொடையாகக் கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களைக் கொல்வதை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?????
விவசாயத்திற்கு ஆட்கள் தேவை :
வாய்க்கால், வரப்பு வெட்ட
மற்றும் தண்ணீர் பாய்ச்ச
"சிவில் எஞ்சினியர்கள்" தேவை.
விதை விதைக்க, களை எடுக்க
"கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள்"
தேவை.
விவசாய வாகனங்கள் மற்றும்
பம்ப் செட் பழுது பார்க்க
"மெக்கானிக்கல்
எஞ்சினியர்கள்" தேவை.
வயல்வெளிகளுக்கு இரவு நேர
வேலைகளுக்கு மின் விளக்கு
பொருத்த மற்றும் இதர மின்சார
சம்பந்தமான வேலைகளுக்கு
"எலெக்ட்ரிக்கல் எஞ்சினியர்கள்"
தேவை.
உழுவதற்கும், பொருட்கள்
கொண்டு செல்வதற்கும்
டிராக்டர் ஓட்ட "ஆட்டோமொபைல்
எஞ்சினியர்கள்" தேவை.
உரம் போட, பூச்சி மருந்து
அடிக்க "கெமிக்கல்
எஞ்சினியர்கள்" தேவை.
தானிய மூட்டைகளை கப்பலில்
வெளிநாட்டிற்கு ஏற்றி விட
"மெரைன் எஞ்சினியர்கள்"
தேவை.
தானியங்களை விமானத்தில்
ஏற்றி விட "ஏரோநாட்டிக்கல்
எஞ்சினியர்கள்" தேவை.
கதிர் அறுக்கும் இயந்திரத்தை
ஓட்டுவதற்கு "மெக்கட்ரானிக்ஸ
் எஞ்சினியர்கள்" தேவை.
தானிய மூட்டைகளை
எண்ணுவதற்கு "எம்.பி.ஏ"
படித்தவர்கள் தேவை.
விவசாய ஆட்களுக்கு சமைத்து
போடுவதற்கு "கேட்டரிங்"
படித்தவர்கள் தேவை.
விவசாய மேற்பார்வை பணிக்கு
"அக்ரிகல்சர் எஞ்சினியர்கள்"
தேவை.
பி.கு : முன் அனுபவம்
உள்ளவர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும். தகுதிக்கேற்ப
சம்பளம் வழங்கப்படும்.
ஓவர்டைம், போனஸ் உண்டு.
# விவசாயத்தை மதிக்கவில்லை
எனில் ஒருநாள் உண்ணுவதற்கு
உணவில்லாமல் நமது வருங்கால
சந்ததிகளின் நிலைமை
இப்படிதான் இருக்கும்.
விவசாய நிலங்களை
அழிக்காதீர்கள், விவசாயத்தை
மறக்காதீர்கள்.(விழிப்புணர்பு
பதிவு மட்டுமே. எனக்கும்
சேர்த்து )
"விவசாயத்தை நேசிப்போம்,
வீரியமாய் வாழ்வோம்".

Monday, March 30, 2015

IPL match schedule 2015



8th - IPL Time Table
👉 08.04.2015 - KKR vs MI
👉 09.04.2015 - CSK vs DD
👉 10.04.2015 - KXIP vs RR
👉 11.04.2015 - CSK vs SRH
👉 11.04.2015 - KKR vs RCB
👉 12.04.2015 - DD vs RR
👉 12.04.2015 - MI vs KXIP
👉 13.04.2015 - RCB vs SRH
👉 14.04.2015 - RR vs MI
👉 14.04.2015 - KKR vs CSK
👉 15.04.2015 - KXIP vs DD
👉 16.04.2015 - SHR vs RR
👉 17.04.2015 - MI vs CSK
👉 18.04.2015 - SHR vs DD
👉 18.04.2015 - KXIP vs KKR
👉 19.04.2015 - RR vs CSK
👉 19.04.2015 - RCB vs MI
👉 20.04.2015 - DD vs KKR
👉 21.04.2015 - RR vs KXIP
👉 22.04.2015 - SRH vs KKR
👉 22.04.2015 - RCB vs CSK
👉 23.04.2015 - DD vs MI
👉 24.04.2015 - RR vs RCB
👉 25.04.2015 - MI vs SRH
👉 25.04.2015 - CSK vs KXIP
👉 26.04.2015 - KKR vs RR 
👉 26.04.2015 - DD vs RCB
👉 27.04.2015 - KXIP vs SRH
👉 28.04.2015 - KKR vs DD
👉 29.04.2015 - RCB vs RR
👉 30.04.2015 - CSK vs KKR
👉 01.05.2015 - DD vs KXIP
👉 01.05.2015 - MI vs RR
👉 02.05.2015 - RCB vs KKR
👉 02.05.2015 - SRH vs CSK
👉 03.05.2015 - KXIP vs MI
👉 03.05.2015 - RR vs DD
👉 04.05.2015 - CSK vs RCB
👉 04.05.2015 - KKR vs SRH
👉 05.05.2015 - MI vs DD
👉 06.05.2015 - RCB vs KXIP
👉 07.05.2015 - RR vs SRH
👉 08.05.2015 - CSK vs MI
👉 09.05.2015 - KKR vs KXIP
👉 09.05.2015 - DD vs SRH
👉 10.05.2015 - MI vs RCB
👉 10.05.2015 - CSK vs RR
👉 11.05.2015 - SRH vs KXIP
👉 12.05.2015 - DD vs SRH
👉 13.05.2015 - KXIP vs RCB
👉 14.05.2015 - MI vs KKR
👉 15.05.2015 - SRH vs RCB
👉 16.05.2015 - KXIP vs CSK
👉 16.05.2015 - RR vs KKR
👉 17.05.2015 - RCB vs DD
👉 17.05.2015 - SRH vs MI

End of League Phase
👉 18.05.2015 - REST DAY

PLAY - OFFS
👉 19.05.2015 - Qualifier 1
👉 20.05.2015 - Eliminator
👉 21.05.2015 - REST DAY
👉 22.05.2015 - Qualifier 2
👉 23.05.2015 - REST DAY
👉 24.05.2015 - FINAL🏆

FORWARD THIS TO YOUR FRIENDS AND GROUP📩

Solar charger

Friday, March 27, 2015

மேக தாது அணை ஒரு பார்வை

கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாது என்ற இடத்தில் அணை கட்டவிருப்பது உங்களுக்கு தெரியுமா? 

இல்லை என்றால் விளக்கமாக தெரிந்து கொள்வீர்.தற்போது கிருஷ்ணராஜசாகர் அணையில் அதிகப்படி நீர் சேர்ந்தால் காவிரியில் திறக்கப்படும்,அதே போல் கபினி நிரம்பினால் அதிகப்படி நீர் காவிரியில் வந்து சேரும் பின்னர் இரு நதிகளும் T.நரசிங்கபுரம் என்ற இடத்தில் சேர்ந்து ஒரே காவிரியாய் தமிழகம் நோக்கி வருகிறது அதில் Megada halli மேகதாது (மேகதஹல்லி)என்ற (கருப்பு கட்டமிட்ட ) இடத்தில் கர்நாடகா நீர்த்தேக்கம் கட்ட உள்ளது , இதில் 43TMC நீரை தேக்க முடியும், அதாவது மேட்டுரின் நீரில்(93.5TMC)கிட்டத்தட்ட சரிபாதி நீர் இதில் தேங்கும். இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வட மாவட்டங்கள் நீரின்றி போகும் அபாயம் உள்ளது , ஆங்காங்கே உள்ள முக நூல் நண்பர்கள் இதனை புரிந்து கொண்டு மற்றோருக்கும் விளக்குவீர்கள் என நம்புகிறேன். 

தலையில் அடித்தால் காலுக்கென்ன என்று இருக்காதீர்கள் ,இந்த விவசாயிகள் எனும் தலை சாய்ந்தால் என்னவாகும் கால் என சிந்திப்பீர். 

வரும் 28.3.2015சனிக்கிழமை நீங்கள் அனைவரும் விவசாயிகளான எங்களுக்கு ஆதரவாய் ஏதேனும் ஒரு வகையில் போராட்டத்தில் இறங்குங்கள். 

28/3/15

Thursday, March 26, 2015

INTERESTING UNKNOWN FACTS


1.Hot water will turn into ice faster than cold water.
2.The Mona Lisa has no eyebrows.
3.The sentence, “The quick brown fox jumps over the lazy dog” uses every letter in the English language.
4.The strongest muscle in the body is the tongue.
5.Ants never sleep!
6.“I Am” is the shortest complete sentence in the English language.
7. Coca-Cola was originally green.
8. The most common name in the world is Mohammed.
9.When the moon is directly overhead, you will weigh slightly less.
10.Camels have three eyelids to protect themselves from the blowing desert sand.
11.There are only two words in the English language that have all five vowels in order: “abstemious” and “facetious.”
12.The name of all the continents end with the same letter that they start with.
13.There are two credit cards for every person in the United States.
14.TYPEWRITER is the longest word that can be made using the letters only on one row of the keyboard.
15.Minus 40 degrees Celsius is exactly the same as minus 40 degrees Fahrenheit.
16.Chocolate can kill dogs, as it contains theobromine, which affects their heart and nervous system.
17.Women blink nearly twice as much as men!
18.You can't kill yourself by holding your breath.
19.It is impossible to lick your elbow.
20.The Guinness Book of Records holds the record for being the book most often stolen from Public Libraries.
21.People say "Bless you" when you sneeze because when you sneeze, your heart stops for a millisecond.
22.It is physically impossible for pigs to look up into the sky
23.The "sixth sick sheik's sixth sheep's sick" is said to be the toughest tongue twister in the English language.
24.“Rhythm” is the longest English word without a vowel.
25.If you sneeze too hard, you can fracture a rib. If you try to suppress a sneeze, you can rupture a blood vessel in your head or neck and die.
26.Each king in a deck of playing cards represents great king from history.
   Spades - King David
   Clubs - Alexander the Great, 
   Hearts - Charlemagne 
   Diamonds - Julius Caesar.
27. It is impossible to lick your elbow.
28.111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321
29.If a statue of a person in the park on a horse has both front legs in the air, the person died in battle.
If the horse has one front leg in the air, the person died as a result of wounds received in battle.
If the horse has a all four legs on the ground, the person died of natural causes.
30.Question -What do bullet proof vests, fire escapes, windshield wipers and laser printers all have in common?
Ans. - All invented by women.
31.Question - This is the only food that doesn't spoil. What is this? 
Ans. - Honey
32. A crocodile cannot stick its tongue out.
33. A snail can sleep for three years.
34. All polar bears are left handed.
35. American Airlines saved $40,000 in 1987 by eliminating one olive from each salad served in first-class.
36. Butterflies taste with their feet.
37. Elephants are the only animals that can't jump.
38. In the last 4000 years, no new animals have been domesticated.
39. On average, people fear spiders more than they do death.
40. Stewardesses is the longest word typed with only the left hand.
41. The ant always falls over on its right side when intoxicated.
42. The electric chair was invented by a dentist.
43. The human heart creates enough pressure when it pumps out to the body to squirt blood 30 feet.
44. Rats multiply so quickly that in 18 months, two rats could have over million descendants.
45. Wearing headphones for just an hour will increase the bacteria in your ear by 700 times
46. The cigarette lighter was invented before the match.
47. Most lipstick contains fish scales.
48. Like fingerprints, everyone's tongue print is different

Wednesday, March 25, 2015

ஏன் இந்தியா எப்போதும் பிரச்சனையிலே இருக்கு

ஏன் இந்தியா எப்போதும்  பிரச்சனையிலே இருக்கு.  

மக்கள் தொகை: 110 கோடி
இதில் 9 கோடி பேர் ஓய்வு பெற்றவர்கள்

30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(ரென்டுபேருமே வேலை செய்றதில்லை)

 
 
1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னைக்கு இந்தியாக்கு உழைச்சாங்க?)

25 கோடி பேர் பள்ளியில படிப்பவர்கள்

1 கோடிபேர் 5வயசுக்கும் கீழானவர்கள்

15 கோடி பேர் வேலை தேடுவோர்

1.2 கோடி பேர் நோயால்  மருத்துவமனையில் இருப்போர்

குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு  (ஒரு புள்ளி விபரத்தின்படி) 79,99,998 பேர் ஜெயிலில் கம்பி எண்ணுகின்றனர் 
  
மிச்சம் இருப்பது நீங்களும் நானும்

நீங்க எப்ப பார்த்தாலும் what's app, Facebookல பிஸி

அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்

2015 தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

பட்ஜெட் சிறப்பம்சங்கள்...


* 40.3 கோடி மனுக்களுக்கு அம்மா திட்டம் மூலம் நிவாரணம்.

* பொதுச்சேவை மையங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களைச் சென்றடைய ஏற்பாடு.

* அம்மா திட்டம் மூலம் 43.9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு தரப்பட்டுள்ளது.

* தமிழ்த்துறையின் வளர்ச்சிக்கு ரூ 46.77 கோடி நிதி ஒதுக்கீடு.

* 17,18,19ம் நூற்றாண்டைச் சேர்ந்த 120 அரிய புத்தகங்கள் இலக்க முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன.

* சாலை விபத்துகளை தடுக்க உயர் முன்னுரிமை.

* சாலை விபத்துகளை தவிர்க்க கூடுதலாக  ரூ.165 கோடி ஒதுக்கீடு.

* சிறைத்துறைக்கு ரூ 227.03 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறைச்சாலை கைதிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ரூ10.78 கோடி ஒதுக்கீடு.

* தீயணைப்புத் துறையை நவீனப்படுத்த ரூ10.78 கோடி நிதி ஒதுக்கீடு.

* காவல்துறைக்கு ரூ5,568 கோடி நிதி ஒதுக்கீடு.

* நீதித்துறைக்கு ரூ 809.70 கோடி ஒதுக்கீடு.

* 169 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல்.

* கிராமப்புற வறுமை ஒழிப்பின் கீழ் பயனாளிகளை அடையாளம் காணும் பணி விரைவில்  முடியும்.

* தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் ரூ 250 கோடி.

* தமிழக வாழ்வாதர திட்டத்திற்கு ரூ 107 கோடி ஒதுக்கீடு

* பயனாளிகளுக்கு மானியங்களை நேரடியாக அளிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.

* சமூக நலத்திட்ட உதவித்தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

* விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.5,500 கோடி வழங்க இலக்கு.

* ரூ.4,955 கோடியாக இருந்த பயிர் கடன்கள் ரூ.5.500 கோடியாக அதிகரிப்பு.

* சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ரூ.50, சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.70 மானியம்.

* விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரங்கள் கிடைக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு.

* நெல்லுக்கான மாநில அரசின் உற்பத்தி ஊக்கத் தொகை ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

* விவசாயிகளுக்கு கடன்கள் வட்டின்றி வழங்கப்படும்.

* தோட்டக்கலை பயிர்ப் பரப்பு 25.9 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு.

* விலையில்லா ஆடுகள், பசுக்கள் வழங்க ரூ.241 கோடி நிதி ஒதுக்கீடு.

* 12,000 கறவை பசுக்கள், 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்க திட்டம்.

* 25 கால்நடை மருந்தகங்கள் புதிதாக தரம் உயர்த்தப்படும்.

* கைத்தறை மற்றும் நெசவுத்துறைக்கு 499.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* கைத்தறி விற்பனையை ஊக்குவிக்க தள்ளுபடி மானியத் திட்டத்திற்கு ரூ.78.45 கோடி.

* தமிழகத்தில் உள்ள 113 அணைகளை புனரமைக்க ரூ.450.13 கோடி ஒதுக்கீடு.

* நீர்ப்பாசத் துறைக்கு ரூ.3,727.37 கோடி நிதி ஒதுக்கீடு.

* நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு ரூ.253.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* மின்சாரத் துறைக்கு ரூ.13,586 கோடி நிதி ஒதுக்கீடு.

* 2015-16ம் ஆண்டில் மின்சார மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.7,136 கோடியாக உயர்வு.

* நெடுஞ்சாலைத் துறைக்கு 8,828 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு.

* 427 கி.மீ. சாலைகள் ரூ.2,414 கோடியில் இரு வழித்தட சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

* கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,422.08 கோடி நிதி.

* 6 ஆயிரம் கி.மீ. ஊரக உள்ளாட்சி அமைப்புச் சாலைகளை மேம்படுத்த ரூ.1,400 கோடி நிதி.

* வரும் நிதியாண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்.

* திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான நிதி ரூ.100 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக உயர்வு.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.365.91 கோடி நிதி ஒதுக்கீடு.

* தகவல் தொழ்ல்நுட்பவியல் துறைக்கு ரூ.82.94 கோடி நிதி ஒதுக்கீடு.

* சூரிய ஒளி பசுமை வீடுகள் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி ஒதுக்கீடு.

* மாணவர்களுக்கான இலவச பேருந்து பயன மானியத்திற்கு ரூ.480 கோடி.

* டீசல் மாணியம் ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* மக்கள் நல்வாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8,245 கோடியாக உயர்வு

* தேசிய சுகாதார இயக்க திட்டத்திற்கு ரூ.1,342.67 கோடி

* முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.781 கோடி நிதி ஒதுக்கீடு.

* கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ.668.32 கோடி ஒதுக்கீடு.

* குழந்தைகள் நல பரிசு பெட்டக திட்டத்திற்கு ரூ.50 கோடி.

* மகளிர் சுகாதர திட்டத்திற்கு ரூ.60.28 கோடி நிதி ஒதுக்கீடு.

* மெட்ரோ ரயில் பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்ற ரூ.615.78 கோடி நிதி ஒதுக்கீடு.

* 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.

* அன்னதான திட்டம் மேலும் 206 கோயில்களுக்கு விரிவு.

* 250 பழம்பெரும் கோயில்களை புனரமைக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.

* பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ.140.12 கோடி ஒதுக்கீடு.

* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1,575.36 கோடி நிதி ஒதுக்கீடு.

* பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வகை கலவை சாதம் வழங்க ரூ.1,470.53 கோடி.

* சுற்றுலாத் துறைக்கு ரூ.183.14 கோடி

* அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு ரூ.110.57 கோடி நிதி உதவி.

* பிற பல்கலைக் கழகங்களுக்கு ரூ.868.40 கோடி நிதி உதவி.

* பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கீடு.

* உயர்கல்வித் துறைக்கு ரூ.3,696.82 கோடி நிதி.

* விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவை வழங்க நிதி ரூ.1,037.85 கோடி

* 6.62 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க ரூ.219.50 கோடி நிதி ஒதுக்கீடு.

* ரூ.450.96 கோடி நிதியில் பள்ளிக் கட்டமைப்பு வலுப்படுத்த திட்டம்.

* தொழிலாளர் நலத்துறைக்கு மொத்தம் ரூ.139.26 கோடி.

* தொழிலாளர் நல வாரியங்களுக்கான நிதி உதவிக்காக ரூ.70 கோடி

* மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரூ.364.62 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கு ரூ.18,668 கோடி.

* ஓய்வூதிய காப்பீட்டு திட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சை.

* பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு ரூ.250.49 கோடி.

* விடுதி பராமரிப்பு மற்றும் உணவு செலவினங்களுக்கு ரூ.82.69 கோடி.

* சிறுபான்மையினர் நலனுக்காக ரூ.115.80 கோடி நிதி ஒதுக்கீடு.

* கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்காக ரூ.101.50 கோடி.

* இலங்கைத் தமிழர் நலனுக்காக ரூ.108.46 கோடி நிதி ஒதுக்கீடு.

* வணிகவரி வசூல் ரூ.72,068 கோடி இலக்கு.

* எல்.இ.டி. விளக்குகளுக்கான மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதமாக குறைப்பு.

* செல்போன் மீதான மதிப்புக் கூட்டு வரி 14.5% இருந்து 5% ஆக குறைப்பு.

* 10 குதிரைத் திறன் மோட்டார் பம்பு, பாகங்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி குறைப்பு.

* மீன்பிடிப்புக்கு பயன்படும் துணைப்பொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் நீக்கம்.

* உயிரி எரிபொருள் மூலம் (கரும்பு சக்கையை தவிர) உற்பத்தியாகும் மின்சாரம் மீதான வரி விலக்கப்படும்.

* பசுமை எரிசக்தி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வரி விலகு.

இந்த வரி குறைப்பு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.650 கோடி இழப்பு ஏற்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்து உள்ளார்

விவசாயத்திற்கு எப்படி நீர் குறைந்தது





தமிழகம் மட்டுமல்லாது இந்திய வேளாண்மையில் கிணற்றுப் பாசனம் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கிறது. கமலை, இறைப்பெட்டி போன்ற நீரிறைக்கும் கருவிகளைக் கொண்டு ஒரு காலத்தில் வேளாண்மை நடந்துவந்தது.
கிணற்றுப் பாசனம் தன்னகத்தே ஒரு பண்பாட்டுக் கூறையும் கொண்டிருந்தது. கமலைத்தோட்டம், முன்னும் பின்னும் போய்வரும் காளைகள், கிணற்றடியில் பூவரச மரம், அதில் தூங்கும் குழந்தை, அதற்குத் தாலாட்டு பாடும் தாய், கமலைக்கயிற்றைப் பிடித்துத் தொங்கும் சிறார்கள் என்று ஓர் இனிய ஓவியம் நம்முன் தோன்றும்.
இன்று கமலைக்கிணறு என்பது காண முடியாத காட்சியாகிவிட்டது. கமலை வைத்து நீரிறைக்கும்போது குறிப்பிட்ட அளவு நீர் மட்டும் எடுக்கப்படும்.
கமலையின் மகத்துவம்
நீரில் மூன்று அடுக்குகள் உள்ளன. முதலாவது மேல்மட்ட நீர் (surface water), இரண்டாவது தந்துகிக் குழாய் நீர் (capillary water), மூன்றாவது நிலத்தடி நீர் (ground water).
பொதுவாக மேல்மட்ட நீரானது குளங்களிலும் ஆறுகளிலும் காணப்படும். நிலத்தடி நீர் என்பது 100 அடிக்கும் கீழே தண்ணீர் தாவளங்களாக (aquifers) காணப்படும். இதற்கிடையில் உள்ள நீர், நுண்துளை நீர் என்று அழைக்கப்படும். இது ஆண்டுதோறும் பெய்யும் மழை, குளங்களில் சேமிக்கப்படும் நீரின் அளவு, காணப்படும் மரங்களின் அடர்த்தி ஆகியவற்றைக்கொண்டு உருவாகும்.
பொதுவாகக் கமலைக் கிணறுகள் யாவும் இந்த நுண்துளை நீரை மட்டுமே பயன்படுத்துபவை. கமலையின் இறைப்பு அளவும், கிணற்றின் நீர் ஊறும் திறனும் பெரும்பாலும் சமமாக இருக்கும். ஒரு சால் நீரை வாய்க்காலில் ஊற்றிவிட்டு, அடுத்த சால் இறைக்கப் போகும்முன் நீர் ஊறிவிடும். இதைத்தான் நீடித்த தன்மை (sustainability) என்று இப்போது பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
வந்தது மோட்டார்
ஆனால், வேதி உரங்கள் அறிமுகம் ஆனவுடன் இந்த நீரின் அளவு போதுமானதாக இல்லை. ஏனெனில், வீரிய விதைகளுக்கு உரமும், அதனால் அதிக நீரும் தேவைப் பட்டது. ஆனால், நாட்டு விதைகளுக்கு அப்படி ஒரு நெருக்கடி இல்லை. இதனால் கமலைகளை மாற்ற வேண்டிய நிலைக்கு உழவர்கள் ஆளானார்கள்.
அப்போது வங்கிகள் மின் எக்கிகளை (electric motor) அமைத்துக்கொள்ளக் கடன் வழங்கின. கடன் பெறத் 'தகுதி' பெற்றோர் கடன் வாங்கி 'மோட்டார்களை' அமைத்துக் கொண்டனர். ஒரு சிற்றூரில் 100-க்கு 80 பேர் கமலை வைத்திருந்தார்கள் என்றால், அதில் 20 பேருக்கு மட்டும் கடன் கிடைத்தது. அதாவது, 80 உழவர்களில் 20 பேர் மின் எக்கிகளுக்கு மாறினர்.
மின்சார எக்கிகள் நீரை மிக வேகமாக உறிஞ்சின. கிணற்றின் ஊறும் வேகம் மின்சார எக்கிகளுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே, கிணறுகளில் நீர் மட்டம் அதி வேகமாகக் கீழிறங்கியது. இதனால் மீத முள்ளவர்களும் மின்சார எக்கிகளுக்கு மாற வேண்டும் அல்லது சாகுபடியைக் கைவிட வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகினர்.
வற்றிய கிணறுகள்
நீர் மட்டம் கீழிறங்கியதால் பலர் கிணறுகளை ஆழப் படுத்தினர். இதுவும் வசதி படைத்த ஒரு சிலராலேயே முடிந்தது. விளைவு பாதிக்கு மேற்பட்டோர் சாகுபடியை விட்டு வெளியேறினர். நகர்ப்புறங்களுக்குச் சென்று குடியேறினர். வேதி உரம் இட்ட நிலத்தில் தழை ஊட்டத்தைப் பிடித்துத்தரும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்தது. எனவே, மேலும் உரம் போட வேண்டியதாயிற்று, இதனால் கூடுதல் நீர் பாய்ச்ச வேண்டியதாயிற்று. திறந்தவெளிக் கிணறுகளால் பயனில்லாத நிலை ஏற்பட்டதால், ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டன. இன்று கோவை பகுதியில் மட்டும் ஆயிரம் அடி ஆழமான ஆழ்துளைக் கிணறுகள் நூற்றுக்கும் மேலாகக் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதை இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்.
ஏன் காக்க வேண்டும்?
இந்தச் சூழலில்தான் விதைகளைக் காக்க வேண்டிய கடமை உழவர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளது. தமிழகத்தில் கிச்சிலி, மொழிக்கறுப்பு, மாப்பிள்ளைச் சம்பா முதலிய 75-க்கும் மேற்பட்ட நெல் வகைகள் மீட்கப்பட்டுள்ளன. சடைத் தினை, செந்தினை, வரகு, பனி வரகு, குதிரைவாலி, சடைக் குதிரைவாலி என்று நாட்டு விதைகள் பல உள்ளன. இவற்றைக் காப்பதன் மூலமே, நமது நாட்டின் வேளாண் இறையாண்மையைக் காக்க முடியும், காக்க வேண்டும்.

Tuesday, March 24, 2015

Monday, March 23, 2015

Tribute posters for Mr Lee Kuan Yew in Tamilnadu, India
















அரிய தகவல்

இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம். …….👇


👉மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

👉பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

👉உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

👉மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

👉பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

👉பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

👉நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

👉நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

👉ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

👉தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.

👉முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு.

👉தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

👉மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.

👉புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் – சுறாமீன்.

👉நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் – சுறாமீன்.


👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்

👉ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.

👉துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.
👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

👉சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

👉ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

👉குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

👉சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

👉நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

👉தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.

👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.

👉இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.

👉காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

👉குளிர் காலத்தில் குயில் கூவாது.

👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

👉கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.

👉வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

👉ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

👉பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

👉ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.
👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

👉சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
👉யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
👉நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
👉டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
👉புழுக்களுக்கு தூக்கம கிடையாது.

👉நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

Rajinikanth explain about NEED and GREED

Saturday, March 21, 2015

தமிழ்நாடு அரசு கேபிள் பொது இ- சேவை


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகத்தில் உள்ள 254 வட்டங்களிலும் பொது இ-சேவை மையங்களை அமைத்து நிர்வாகித்து வருகிறது. இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 09.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை செயல்படும். பொது மக்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று அரசின் சேவைகளைப் பெறலாம்.

பொது இ-சேவை மையங்களில்,

* கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ்

    * வருமானச் சான்றிதழ் 

 * சாதிச் சான்றிதழ்

    * இருப்பிடச் சான்றிதழ்

    * முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம்

ஆகிய வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும்  சான்றிதழ்களைப் பெறலாம். 


மேலும், சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான பல்வேறு திருமண உதவித்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

இம்மையங்களில் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தையும் செலுத்தி இரசீது பெற்றுக்கொள்ளலாம்.

ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகையை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையங்களுக்குச் சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள பதிவு எண்ணை காண்பித்து ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம்,  அல்லது இம்மையத்தில் உள்ள இயந்திரத்தில் தங்களது கைரேகையை பதிவு செய்து கொண்டு ஆதார் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம், அல்லது விண்ணப்பம் செய்தபோது தங்களின் கைபேசி எண்ணை பதிவு செய்திருந்தால் அதை தெரிவித்து, ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளும் வசதி இப்பொது இ-சேவை மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாஸ்போர்ட் பெறுவதற்கும், புதிதாக வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கும், ஏற்கனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்து கொள்வதற்கும், பான்கார்டு ( PAN card) பெறுவதற்கும்,  ஓய்வூதியத் திட்டங்களில் சேர்வதற்கும் அனைத்து  வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால்  அமைக்கப்பட்டுள்ள பொது இ-சேவை மையங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு அவர்கள் கோரியுள்ள சான்றிதழ் தயார் ஆனதும்,  விண்ணப்பத்தாரரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படுகிறது.

பல்வேறு முக்கிய அரசுச் சான்றிதழ்கள் ஒரே இடத்தில் வழங்கப்படுவதால் பொது மக்களுக்கு அலைச்சலும் கிடையாது, செலவீனமும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பொது இ-சேவை மையங்களுக்குச் சென்று அரசின் சேவைகளைப் பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
---
ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப.,
மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

நுகர்வோரே விழித்திரு ! உங்களுக்கு தெரியுமா



உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
______________________________

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். 
_____________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. 
______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற? 
_______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான். ____________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள். 
__________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை. 
__________________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

PIZZA பற்றி பார்ப்போம். 
PIZZA விற்கும் கம்பனிகள் 
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள். 
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது. 

● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ? 
E 322 – எருது 
E 422 – ஆல்கஹால் 
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல் 
E 471 – எருது & ஆல்கஹால் 
E 476 – ஆல்கஹால் 
E 481 – எருது & கோழி 
E 627 – ஆபத்தான கெமிக்கல் 
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி 
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு. 
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!!

இயற்கையாய் இயற்கையோடு வாழ..! 
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..! 
+++++++++++++++++++++++++++++++
பொது நலம் கருதி வெளியிடுவோர் :-

IPHONE 7 new model pictures

கோடை வெயிலுக்கு குலுகுலு நுங்கு

நன்மை எல்லாம் தரும் நுங்கு!
நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும்.
பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும்.
சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும்.
குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.
நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும்.
நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.

Rare collection of Mr lee kuan yew ( father of SINGAPORE)