Tuesday, July 28, 2015

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு.
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே
கூறிவிட்டது
அறிவியல் உண்மை ( ஆன்மீகம் )

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். 

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். 

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். 

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். 

காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. 

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? 

இல்லை, 

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. 

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். 

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
 சக்தி இருக்கிறது. 

அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! 

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான். 

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? 

தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. 

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? 

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். 

மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். 

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். 

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. 

அது நாலாபுறமும் 75000சதுர
 மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! 

இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

 "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
 வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..

படித்ததும் பகிரவும். இது இந்து மதத்தின் உண்மை.

Wednesday, July 1, 2015

Music player updates from Apple

Thursday, May 14, 2015

சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி??


Software Engineers மொத்தம் ரெண்டு வகை,
காலைல 8 மணிக்கு ஆபீஸ் வந்துட்டு switch போட்ட grinder மாதிரி, night வரைக்கும் உக்காந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு ,work pressureனு வீட்ல போய் அம்மா,அப்பா,பொண்டாட்டி கூட சண்ட போட்டுட்டு படுத்து தூங்கறவங்க மொத கோஷ்டி.இவங்க, அவங்களா உழைச்சு , increment வாங்கி , onsite போய், சம்பாரிச்சு, மண்டைல முடி கொ
ட்டி, கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிருவாங்க.... இவங்களுக்கு நம்ம அட்வைஸ் ஏதும் தேவை இல்ல....



ரெண்டாவது கோஷ்டி:
வேல செய்ய புடிக்காம, கடுப்புல வந்து, ஏனோ தானோன்னு வேல செஞ்சு, increment இல்லாம,onsite இல்லாம, வீட்ல, 'சாப்பாட்ல உப்பு இல்லன்னு' சொன்னா,' PCS/Cunfosys/GTS/JCLல தான வேல செய்யற??' ன்னு நக்கல் பேச்சுக்கு ஆள் ஆகி,தினமும் Managerகிட்ட 'You have to put some extra efforts man'ன்னு பேச்சு வாங்கிட்டு இருக்கற 73% பேரு....


இவங்கல்லாம் கஷ்டப்பட்டு வேல செய்யாமலே முன்னேறரதுக்கு எளிய வழிகள்:

*.காலைல மேனேஜர் office போறதுக்கு முன்னாடி நம்ம போயரனும்,Evening அவர் கெளம்புனதுக்கு அப்புறம் தான் நம்ம கெளம்பனும்(அந்த timeல வேல செய்யனும்கறது முக்கியம் இல்ல....).....

*. 5 mins வேலையா இருந்தாலும், பெருசா build up பண்ணனும்,
For example,
உங்க lead சின்னதா excel sheetla ஒரு fieldla ஏதாவது change பண்ண சொன்னாங்கன்னா, அந்த வேலைய செஞ்சு முடிச்சிட்டு,

Hi Ramesh,

As discussed with you yesterday evening over phone, I have successfully changed 3rd row, 4th column of the 'employee details' excel sheet.
Please find the updated excel sheet in the following folder path,

<<folder path/file name>>

Please reply back for any clarifications

Thank you,
XXXXXXXXXXXXXX,
Software Analyst,
YYYY Consultancy Solutions,
Chennai.

அப்படின்னு 5 நிமிஷ வேலைக்கு 15 நிமிஷம் செலவு பண்ணி மெயில் போடணும்....Team members, module lead, group lead, project manager எல்லார்த்தையும் CCல வெக்கணும்....

* .birthday celebrations, Team outingநா, மூஞ்சில cake பூசறது , photo எடுக்கும்போது கொம்பு வெக்கறது , அப்பப்ப ரெண்டு மூணு மொக்கைய போடறதுன்னு நல்லா 'performance' பண்ணனும்....


*Managera எதிர்த்து பேசவே கூடாது, manager சொன்னா ஒன்னும் ஒன்னும் மூணு....

* தெரியாம கூட , 'தெரியாது' ங்கற வார்த்தைய சொல்லிரவே கூடாது. சுத்தமா தெரியாத ஒரு tool, software அல்லது technology பத்தி manager/lead கேட்டா கூட ,
Its a kind of,Its a sort of, In the sense, usability, modularity, quality, technically speaking , cost cutting, probably, actually இந்த மாதிரி வார்த்தைகள போட்டு, ஒரு statement குடுத்தரனும்...

*.Client visit வந்தா, clientsஓட நல்லா interact பண்ணனும்.
What do you think about Indian culture?,
Which one u like most, Dosa or Chappathi?
What will be the future of Indian Software Engineers?(அங்க Eurozone crisis வந்து, கொஞ்ச நாள்ல அவன் futureருக்கே வழியில்லன்னு தெரிஞ்சிருந்தாலும் பரவால்ல....)
இந்த மாதிரி மொக்கத்தனமான கேள்வியெல்லாம் கேக்கணும்....

*. அப்பப்ப sweets எடுத்துட்டு வரணும்,

Hi All,
Sweets at my desk, Please help yourselves,

அப்டின்னு mail போட்டு எல்லார்த்துக்கும் குடுக்கணும்....இப்படி டகில்பாஸ் வேல செஞ்சாதான் நம்மளோட managerஉக்கு நம்மளோட teamwork தெரியும்.

இது போக அப்பப்ப யாருக்காவது ஏதாவது சொல்லிக்குடுக்கனும் (எல்லார்த்துக்கும் தெரியுற மாதிரி சத்தமா ), Juniorsக்கு அட்வைஸ் பண்ணனும் ,Team movie போனா ticket book பண்ணனும் ,cab book பண்ணனும், Clean shave, formalsனு Raymonds model மாதிரி சுத்தனும்.

இப்படி மேல சொன்ன வேலையெல்லாம் செஞ்சா , Software fieldல முன்னேறி, onsite போயி, சம்பாரிச்சு கல்யாணம் பண்ணி, ஊற தாண்டி ஊரப்பாக்கத்துல ஒரு இடம் வாங்கி settle ஆயிறலாம்....

Thursday, May 7, 2015

Sahasralinga



Sahasralinga is a pilgrimage place in the Sirsi Taluk in the district of Uttara Kannada of Karnataka state in India. It is in the river Shalmala and is famous for being the location where around a thousand lingaswhich are carved on the rocks in the river bank.In fact, the name Sahasralinga means thousand-lingas in Sanskrit.

Wednesday, May 6, 2015

பேன்கள் ( lice or fly babies)



பேன்கள் (Phthirapteraஆங்கிலம்Lice அல்லது fly babiesஎள்ளின் அளவு உள்ள ஒரு ஒட்டுண்ணியாகும். இதில் பழுப்பு நிறப் பேன்களும், கருமையான பேன்களும் அடங்கும். இவை உயிர் வாழ்வதற்காக ஒரு சிறு துளி இரத்தத்தையேமனிதனிலிருந்து உறிஞ்ச வேண்டியிருக்கும். இவை பெரும்பாலும் தலையின் பிடறிப் பகுதி, மற்றும் காதோரங்களிலும் உள்ள முடியில் முட்டை(ஈர்) இடும்.

தலையோடு தலை முட்டும் நெருக்கமான உறவுகளின் போது இலகுவில் ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றும்.ஆயினும் சீப்புதொப்பிதலையணை போன்றவற்றிலும் பரவலாம், பேன்கள் பறக்கவோ தத்தவோ முடியாதவை. ஊர்ந்தே செல்பவை. எனவே ஒருவருக்கு அருகில் இருப்பதால் தொற்ற மாட்டாது. ஒரு பேன் தொற்றியவுடன் வெளிப்படையாக எந்த அறிகுறியும் தெரியமாட்டாது. பேன் பெருகிக் கடிக்கும் போது ஏற்படும் அரிப்பு சினமூட்டும். ஈர் அதிகரிக்கும்போது முடி ஓரங்களில் பொடுகு படிந்ததுபோல அருவருப்பூட்டும்

Tuesday, May 5, 2015

Find your Gender and age





 Microsoft has just developed an addictive new website that offers the answer. The site, how-old.net, takes data from an uploaded image to determine the subject’s age and gender.