Friday, March 27, 2015

மேக தாது அணை ஒரு பார்வை

கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே மேக தாது என்ற இடத்தில் அணை கட்டவிருப்பது உங்களுக்கு தெரியுமா? 

இல்லை என்றால் விளக்கமாக தெரிந்து கொள்வீர்.தற்போது கிருஷ்ணராஜசாகர் அணையில் அதிகப்படி நீர் சேர்ந்தால் காவிரியில் திறக்கப்படும்,அதே போல் கபினி நிரம்பினால் அதிகப்படி நீர் காவிரியில் வந்து சேரும் பின்னர் இரு நதிகளும் T.நரசிங்கபுரம் என்ற இடத்தில் சேர்ந்து ஒரே காவிரியாய் தமிழகம் நோக்கி வருகிறது அதில் Megada halli மேகதாது (மேகதஹல்லி)என்ற (கருப்பு கட்டமிட்ட ) இடத்தில் கர்நாடகா நீர்த்தேக்கம் கட்ட உள்ளது , இதில் 43TMC நீரை தேக்க முடியும், அதாவது மேட்டுரின் நீரில்(93.5TMC)கிட்டத்தட்ட சரிபாதி நீர் இதில் தேங்கும். இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வட மாவட்டங்கள் நீரின்றி போகும் அபாயம் உள்ளது , ஆங்காங்கே உள்ள முக நூல் நண்பர்கள் இதனை புரிந்து கொண்டு மற்றோருக்கும் விளக்குவீர்கள் என நம்புகிறேன். 

தலையில் அடித்தால் காலுக்கென்ன என்று இருக்காதீர்கள் ,இந்த விவசாயிகள் எனும் தலை சாய்ந்தால் என்னவாகும் கால் என சிந்திப்பீர். 

வரும் 28.3.2015சனிக்கிழமை நீங்கள் அனைவரும் விவசாயிகளான எங்களுக்கு ஆதரவாய் ஏதேனும் ஒரு வகையில் போராட்டத்தில் இறங்குங்கள். 

28/3/15

No comments:

Post a Comment