கல்லூரி முடித்த பின் செய்ய வேண்டியவை....
*காலையில் பத்து மணிக்கு முன்னர் தயவு செய்து எந்திரித்து தொலைக்கவேண்டாம். மீறி எழுந்தால், வேலைக்கு செல்பவர்களை பார்த்து மனம் உடைய நேரிடலாம்.
*மேலும் வேலைக்கு செல்லும் நண்பர்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
*காலையில் எழுந்தவுடன் காலை உணவு உண்ட பின்னர் உங்கள் மெயில் ஐடி’யை செக் செய்யவும்.அதில் பல வேலை வாய்ப்பு தகவல்கள் வந்து, தலையை வலிக்க வைக்கும்.
*உடனே Youடுபெ அல்லது Facebookக்கு சென்று இளைப்பாறவும்.
*தப்பிதவறிகூட வீட்டு வேலைகளை செய்யக்கூடாது. அதையும் மீறி வீட்டில் யாராவது வேலை சொன்னால் அதை காதில் வாங்கக்கூடாது.
*வேலை இல்லாதவருக்கு மதிய தூக்கம் மிக மிக அவசியம்.அதனால்
கண்டிப்பாய் பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணி வரை தூங்கி விடவும்.
*மாலை எழுந்ததும் தேனீர் அருந்திவிட்டு, உங்களை போல்
வேலை இல்லாத உங்கள் நண்பர்களை சந்தித்து இந்திய பொருளாதாரம் முதல் சமந்தாவின் வாழ்வாதாரம் வரை வெட்டி பேச்சு பேசலாம்.
*இரவு அனைவரும் தூங்கும் நேரத்திற்கு சரியாய் வீடு வந்து சேர்ந்து விடவும்,கொஞ்சம் முன்னாலோ பின்னலோ வந்தால் தந்தையிடம் திட்டு நிச்சயம்,முடிந்தவரை தந்தை உறங்கிய பின் வீட்டுக்கு வருதல் நல்லது.
*பின்னர் இரவு பொழுது தங்கள் கணினியில் பொழுதை கழிக்கலாம்.
*இடையிடையே உங்களுக்கு வேலை இல்லை என்று யாராவது (முக்கியமாக உறவினர்,பக்கத்துக்கு வீட்டார்….) குத்திக்காட்ட கூடும் அப்போது வெட்கமே இல்லாமல் சிரித்து விடவும்… பின்னர் அவர்களின் வாரிசு அல்லது பிள்ளைகளை எதிர்காலத்தில் பழி தீர்த்து கொள்ளலாம்.
# பின்_குறிப்பு : கல்யாண நிகழ்ச்சிகள், கிடா விருந்து போன்ற உறவினர் தெரிந்தவர் அதிகம் கூடும் இடங்களில் தலை காட்ட வேண்டாம். முடிந்தவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.
Forward message
No comments:
Post a Comment